Tuesday, November 11, 2014

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases

இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த மருத்துவ குணமுடையது.

பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டி அரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெய்யலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.

குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2 -3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கொடுக்கவும்.

வாய்ப்புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேழை மூன்று நாள் கொடுக்க கணமாகும்.

தீராத வயிற்றுப்புண், வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 – 96 நாள் இரு வேளை சாப்பிட குணமாகும். நவ மூலமும், சீழ்ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு வேளை கொடுக்க குணமாகும்.

300 கிராம் பிரண்டை100 கிராம் உப்புடன் ஆட்டி அடைதட்டிமண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்துபுடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாகமாறி இருக்கும் உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம்.

பிரண்டை உப்பை 2 – 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.

இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, மதுமேகம், நீரிழிவு குணமடையும்.

மூன்று வேளை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.

பிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கிராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும்.

பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, இடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக்கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டுகலந்த பாலுடன் உட்கொண்டுவரு உடலுக்கு வன்மை தரும்.

நெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் சிறு குடல் பெருகுடல் புண் நீக்கி நல்ல பசிஉண்டாகும்.

பிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப பாக்களவு வீதம் தினம் இரு வேளையாக எட்டு நாட்கள்உட் கொண்டு வந்தால் மூல நோயில்உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும்.

பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்து தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வர பெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.

பிரண்டை, பேரிலந்தை,வேப்ப ஈர்க்கு,முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.

முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.

பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊரவைத்து வேளைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.

பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.

மருத்துவ மூலிகை :

இலைகளும்,இளம் தண்டுத் தொகுதியும் உடல்நலம் தேற்றுபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீராணகோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு

முறிவுகளில் பயன்படுகிறது. ஒழுங்காக மாதவிடாய் வராத கோளறு, ஆஸ்துமா, ஆகியவற்றை தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.

மெலிந்த உடல் குண்டாக :

ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.

வயிற்றுப் பொருமலால்அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும்.மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

பிரண்டை துவையல் :

எலும்புசந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். அவர்கள் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.

இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப்பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி,
கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.

மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத்துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

மூலநோயால்அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.

ரத்த ஓட்டம் சீராகும்

உடலில்கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால்
இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதயவால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.

எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும்.

குறிப்பு : கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.

Monday, November 10, 2014

மூக்கிரட்டை (சாரணத்தி) மூலிகை :

மூக்கிரட்டை (சாரணத்தி) மூலிகை :


மூக்கிரட்டை (சாரணத்தி) தாவரம் தரையோடு படரும் கொடி இனத்தைச் சேர்ந்தது. நெருக்கமாக வளரும் இந்த தாவரத்தின் பூக்கள் வெள்ளையாகவும் மஞ்சளாகவும் இருக்கும். சாலையோரங்களிலும், வெளியிடங்களிலும் செழித்து வளர்ந்திருக்கும் இந்த தாவரம் மருத்துவ குணம் கொண்டது.

இதன் இலைகள் கீரையாக சமைத்து உண்ணப்படுகிறது. இதனை தனியாக சமைத்து சாப்பிட்டால் கசப்பு சுவையுடன் இருக்கும் என்பதால் கூட்டாக
சமைத்து சாப்பிடுவார்கள். கண் கோளாறு நீங்கும் மூக்கிரட்டை கீரையை பறித்து நன்றாக அலசி எடுத்து பொடியாக நறுக்கி நெய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் கண் தொடர்புடைய நோய்கள் நீங்கும்.

மூக்கிரட்டை கீரையை கசக்கி சாறு பிழிந்து சுத்தமான துணியில் வடிகட்டி அதனை கண்களில் இரண்டு சொட்டு ஊற்றினால் கண் எரிச்சல் நீங்கும்.


இதனை உணவில் அடிக்கடி உபயோகித்து வர கண் தொடர்புடைய நோய்கள் எட்டிப் பார்க்காது.

சிறுநீர் கோளாறு நீங்கும் சிறுநீர்க் குழாய் கோளாறுகளை இக்கீரை உணவு குணமாக்கும். சிறுநீர் கோளாறு உள்ளவர்கள் மூக்கிரட்டையை சமைத்து உண்ண இது சிறுநீரை சுலபமாக பிரித்து வெளியேற்றும்.

இது மலச்சிக்கலை போக்க வல்லது.

மூக்கிரட்டை கீரை இதயத்திற்கு பலம் தரும், அதை நல்ல முறையில் இயங்கச் செய்யும்.

மூலநோய் குணமாகும் மூக்கிரட்டைக் கீரையைக் கொண்டு அதைச் சுத்தம் செய்து, அம்மியில் வைத்து மைய அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து அரிசி மாவுடன் கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து அடைபோல தட்டி சாப்பிடலாம். காலை, மாலை தொடர்ந்து ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூல நோய்களும், குணமாகும்.

இது காய்ச்சல் மற்றும் மலேசிய ஜூரத்தை போக்கும். மூட்டு வலிக்கு இது சிறந்த மருந்தாகும்.

இந்த கீரையை சாப்பிடும் போது அதிக காரம், மீன், கருவாடு, அதிக உஷ்ணம் தரும் உணவுகள், பழம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.

கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்


வேர் :


வேரை உலர்த்திப் பொடித்துக் காலை, மாலை ஒரு சிட்டிகை தேனில் கொள்ள மாலைக் கண், கண்படலம், பார்வை மங்கல் ஆகியவை குணமாகும்.

சளி இருமல் காய்ச்சல் குணமாக

சளி இருமல் காய்ச்சல் குணமாக :

சளி,கபம், நெஞ்சு சளி, குணமாக

வேப்பிலையுடன் ஓமவல்லி இலையை அரைத்து நெற்றியில் தடவிவர சளி சரியாகும்
தூதுவளை, ஆடாதோடா, கண்டங்கத்திரி இலையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து கஷாயம் செய்து தேனுடன் கலந்து சாப்பிட, நாள்பட்ட கட்டிய சளியும் கரையும்.
கருந்துளசியை பிழிந்து, சாரு எடுத்து, தினமும் காலை மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட சளி – கபம், மார்பு சளி குணமாகும்.


ஆடாதோடா இலையை போடி செய்து தேன்கலந்து தினமும் சாப்பிட்டு வர, இருமல் சளி நிற்கும்
கடுக்காய் பொடியுடன் நெல்லி பொடியையும் கலந்து தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம் நீங்கும்.
குழந்தைகள் சளியினால் மூச்சு விட சிரமபட்டால், சிறிது தேங்காய் எண்ணெய் மூக்கில் தடவிட, சிரமம் குறையும்
அமுக்கிராங்கிழங்கு பொடி செய்து, தினமும் இரவில் பாலுடன் சாப்பிட்டு வந்தால்,கபம் போகும்
தூதுவளை ரசம் அல்லது தூதுவளை சூப் குடித்தால் சளி போய்விடும்

தேங்காய் எண்ணையை கற்பூரம் சேர்த்து சுடவைத்து நெஞ்சில் தடவினால், நெஞ்சு சளி குணமாகும்.
ரோஜா பூவை முகர்ந்து பார்த்தல் மூக்கடைப்பு நீங்கும்
அருகம்புல் சாரு சளிக்கு மிகவும் நல்லது.
மாதுளம் பழம் சளிக்கு மிகவும் நல்லது. மாதுளம் பழச்சாறை எலுமிச்சம் சாருடன் கலந்து சாப்பிட்டால் சளி சரியாகும்.

கற்பூரவள்ளி இலையை சூடாக்கி, நெற்றியில் பற்று போட்டால், நெற்றியில் கோத்திருக்கும் நீர் வெளியேறும்


காய்ச்சல் குணமாக :

நிலவேம்பு குடிநீர் அணைத்து விதமான காய்ச்சலையும் குணபடுத்தும்.

ஈர பசையுடன் உள்ள வேப்பமர பட்டையை இடித்து அதில் கால் பங்கு சீரக பொடியுடன் பசும்பாலில் கலந்து சாப்பிட காய்ச்சல் குணமாகும்.

திப்பிலியுடன் , குப்பைமேனி செடியை பொடிசெய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் சரியாகும்.

துளசி, வில்வ இலை, வெப்ப இலை, சந்தனம், கடுக்காய், மிளகு, சிற்றரத்தை ஆகியவை பொடியாக அரைத்து காயவைத்து கொண்டால், காய்ச்சல் வரும் சமயம் 1 தேக்கரண்டி வென்னீரில் கலந்து காலை மாலை குடித்து வர, சுரம் குணமாகும்
வேப்பிலையை வறுத்து அடியில் வைத்து படுத்தால், சுரம் போய்விடும்.
உத்தாமணி-வல்லாரை இலைகளை மிளகுடன் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால், காய்ச்சல் சரியாகும்.


சளி இருமல் குணமாக :

சீரகத்தை வறுத்து பொடிசெய்து, கல்கண்டுடன் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
பொன்னாரை விதையை பசும்பால் விட்டு நன்றாக அரைத்து குழந்தைக்கு கொடுத்து வர, கக்குவான் இருமல் சரியாகும்.
நாட்பட்ட இருமல் நிற்க, முற்றின வெண்டைக்காயை சூப் பண்ணி சாப்பிட்டால், சிறிது சிறிதாக குணம் ஆகும்
சுக்கு மிளகு திப்பிலி சம அளவில் கலந்து போடி செய்து தினமும் 3 வேலை தேனுடன் கலந்து சாப்பிட தொண்டை வலி சரியாகும்.

Sunday, November 9, 2014

ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்

ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்


நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக்கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது.

உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

 திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.

அடங்கியுள்ள சத்துக்கள்:


உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தசோகையை கட்டுப்படுத்தும்:

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

காமாலை நோய் குணமடையும்:

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.

உடல்புஷ்டிக்கு:

இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.

தொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும்முன் 20 பழங்களை சுத்தம்செய்து பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும்.

மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும்.

பெண்கள் நோய் தீரும்:
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஆழாக்கு தண்ணீரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வந்தால் வலி குணமடையும்

மென்று சுவைப்பது நன்று

மென்று சுவைப்பது நன்று 

‘‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’’ என்பது முதுமொழி. அதை முதுமொழியளவிலேயே தான் வைத்திருக்கிறோமே தவிர நடைமுறையில் அதைக் கடைப்பிடிப்பதில்லை. ஒவ்வொரு கிண்ணம் உணவையும் 32 முறை மென்று அதன் பின்னரே விழுங்க வேண்டும் என்று சின்ன வயதில் நமக்கு சொல்லப்பட்டிருந்தாலும் நம்மில் பலர் அதை கடைப்பிடிப்பதில்லை. உணவை ‘லபக், லபக்’ என்று விழுங்கிவிடுகிறோம். போதாக்குறைக்கு ஃபாஸ்ட் புட் வேறு பாடாய்படுத்துகிறது.

நம் உடலிலுள்ள உறுப்புக்களில் உணவின் சுவையை அறியக் கூடிய ஒரே ஒரு உறுப்பு நாக்கு மட்டும் தான். நாக்கை விட்டுப் பிரிந்து தொண்டைக் குழியில் இறங்கி உணவு என்னவாகிறது என்பது நம்மில் பெரும் பாலோருக்குத் தெரியாது. எனவே, உணவு எவ்வளவுக் கெவ்வளவு அதிக நேரம் நமது நாக்குடன் உறவு கொண்டிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு உணவின் ருசியை நாம் உணர்ந்து அனுபவிக்க முடியும்.

உணவின் சுவையை அறிவதற்கு மட்டுமின்றி நன்கு மென்று சுவைத்து உண்ணப்படுகின்ற உணவு எளிதில் செரிமானம் அடைகிறது. இதற்கென்றே குறிப்பிட்ட வகையில் நம்முடைய பற்கள் அமைந்துள்ளன. இருப்பினும் நம்மில் எத்தனை பேர் இயற்கை தந்திருக்கும் இந்த அருட்கொடையை எண்ணி வியந்திருக்கிறோம்?

பல மனிதர்கள் ஆடிக் கொண்டும், ஓடிக் கொண்டும் அவசரம் அவசரமாகவும் உண்கின்றனர் இதனால் உணவை மென்று சுவைத்து உண்ண அவகாசம் இன்றிப் போகிறது. மென்று உண்ணவும் உண்ட பின் சிறிது ஓய்வு கொள்ளவும், நேரமில்லாத போது உண்பதைத் தள்ளிப் போட வேண்டும். அது மட்டுமின்றி அவசரமாக உண்கின்ற வேளையில் நிகழ்கின்ற மனநிலை மாறுபாடுகளால் வாயிலும், வயிற்றிலும் சுரக்க வேண்டிய பல செரிமான நீர்கள் சுரக்காமலே போய் விடுவதுண்டு. அதுவுமில்லாமல் வாயில் தொடங்கி மலக்குடல் சீராக நடைபெறுகின்ற செரிமான நிகழ்ச்சிகளில் உணவை வாயிலிட்டு மென்று சுவைப்பது ஒன்று தான்.

நம் கட்டுப்பாட்டில் உள்ள செயல் (Voluntary) தொண்டைக்குக் கீழ் நிகழ்கின்ற பிற செயல்கள் எதிலும் நமக்குக் கட்டுப்பாடில்லை அவை தமக்குத் தாமே நிகழ்பவை. எனவே நமக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பை நன்கு பயன்படுத்தி உணவுப் பொருட்களை நன்கு மென்று, சுவைத்து உண்ண வேண்டாமா?

உணவு செரிமானமாவது வாயிலேயே தொடங்கிவிடுகிறது. நம் வாயிலுள்ள உமிழ் நீர்ச் சுரப்பிகள் உமிழ்நீரைச் சுரக்கின்றன. உணவு உமிழ் நீருடன் கலக்கும் போது அதன் சுவை மேலும் அதிகரிக்கிறது. அத்துடன் மாவுப் பொருட்கள் உமிழ் நீருடன் கலந்து வாயிலேயே உடைபடத் தொடங்குகின்றன. இந்த உமிழ் நீரில் உள்ள டயலின் (றிtஹ்றீவீஸீமீ) என்னும் நொதி மாவுப் பொருளைச் சர்க்கரையாக மாற்றத் தொடங்கிவிடுகிறது. இது சிறுகுடலுக்குச் செல்கின்ற போது எளிதாகச் செரிக்கப்படுகிறது.

நன்கு சுவைக்காமல், மெல்லாமல் உணவு விழுங்கப்படுகின்ற போது பசியின்மை, செரிமானக் குறைவு, வயிற்றோட்டம், மலச்சிக்கல் என்று பலவகைத் தொல்லைகள் தோன்றக் தொடங்குகின்றன. உணவு பற்களால் நன்கு அரைக்கப்பட்டு, மெல்லப்படுகின்ற போது அவை மிக நுண்ணிய துகள்களாக மாறுகின்றன. அப்போது உமிழ் நீர் மிக எளிதாக அவற்றுடன் இணைய முடிகிறது. உணவுப் பொருள்கள் வாயில் நன்கு அரைபடாமல் விழுங்கப்படுமாயின் உள்ளே உள்ள உறுப்புகள் தமது சக்திக்கு மீறி உழைக்க வேண்டிய கட்டாயத்திற்குக் ஆட்படுகின்றன. இது குறித்தே ‘‘பற்கள் உங்கள் வாயில் தான் இருக்கிறதே தவிர வயிற்றுக்குள் இல்லை’’ என்று கூறுவார் ஒரு உணவியல் அறிஞர்.

நன்கு சுவைத்து மென்று உண்ணச் சிறிது அதிகமான நேரம் தேவைப்படுவதால் மிகுந்த உணவு உண்பது தவிர்க்கப்படுகிறது. பசி எளிதில் அடங்குகிறது. அது மட்டுமின்றி சமைக்கப்படாத பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றையும் உண்ண இயலுகிறது. பொரித்த, வறுத்த, பதனிடப்பட்ட பல உணவுகள் உடல் நலத்துக்கு ஏற்றவையல்ல என்று தெரிந்திருந்தும் உண்கிறோம். இவற்றைமென்று உண்ணத் தேவையில்லாத காரணத்தால் விழுங்குகிறோம். அதுவும் அதிக அளவில் எண்ணெயும், காரமும், மசாலாவும் சேர்ந்த இவ்வகை உணவு வயிற்றினுள் சென்று அங்குள்ள சீத சவ்வைச் சேதமுறச் செய்கின்றன. இதன் விளைவாக அஜுர்ணம், ஏப்பம், உப்புசம், மலச்சிக்கல் போன்ற பல நோய்கள் உண்டாகின்றன.

எனவே முயன்ற வரை இயற்கை உணவுகளை உண்பதுடன் எஞ்சிய பிற உணவு வகைகளை நன்கு மென்று சுவைத்து உண்பது உடலுக்கு நன்மை பயக்கும்.

உமிழ்நீர்

உமிழ்நீர் :

என்பது வாயில் ஊறும் நீர்மம். இது நாம் உண்ணும் உணவை எளிதாக உட்கொள்ள உதுவுமாறு ஈரப்படுத்தியும், உணவைச் செரிக்க உதவும் அமிலேசு என்னும் நொதியம் கொண்டதாகவும் உள்ள வாயூறுநீர் ஆகும். தமிழில் உமிழ்நீர் என்பதை எச்சில், வாயூறுநீர், வாய்நீர் என்றும் சொல்வர். ஒரு நாளைக்கு மாந்தர்களின் வாயில் 1-2 லீட்டர் அளவும் உமிழ்நீர் சுரக்கின்றது. உமிழ்நீர் சுரத்தல் பிற முதுகெலும்புள்ள விலங்குகளிலும் உண்டு. மாந்தர்களின் வாயில் உள்ள மூன்று பெரிய உமிழ்நீர்ச் சுரப்பிகளும் (படத்தைப் பார்க்கவும்), நாக்கு, கன்னம் (கன்னக் கதுப்பு), உதடு, மேலண்ணம் போன்ற பகுதிகளில் உள்ள சிறுசிறு சுரப்பிகளும் உமிழ்நீரை வாயில் ஊறச் செய்கின்றது. உணவின் மணம் உணர்ந்தாலேயே வாயில் உமிழ்நீர் சுரத்தல் இயல்பாக நடத்தல்.

உமிழ்நீரானது உணவை ஈரப்படுத்தி உட்கொள்ளவும், செரிமானம் செய்யவும் உதவுவது மட்டும் அல்லாமல், நாவை அசைத்து மொழி பேசவும் உதவுகின்றது. உமிழ்நீர் உணவுத் துகள்களைக் கரைப்பதால் உணவின் சுவை உணரப்படுகின்றது. உடலில் நீரின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. உடலில் நீரின் அளவு குறைந்தால், நா வரண்டு போவது, உமிழ்நீர் குறைவதாலேயே. இதலால் நீர் அருந்த குறிப்பு தருகின்றது. உமிழ்நீர் பற்களின் நலம் கெடாமலும், உணவுத்துணுக்குகள் வாயுள் கிடந்து பிற நுண்ணுயிர்களால் நோய் உண்டாக்காமல் வாயில் இருந்து நீக்கியும் உதவுகின்றது. உமிழ்நீரில் உள்ள அமிலேசு என்னும் நொதியம் மாவுப்பொருளான கார்போஹைடிரேட்டுகளை வேதியியல் முறையில் பிரித்து செரிப்பதற்கு எளிமையான பொருளாக மாற்ற உதவுகின்றது.
உமிழ்நீரில் உள்ள உட் கூறுகள் :
உமிழ்நீரில் 98% நீர்தான் எனினும், சிறிதளவு பல்வேறு முக்கியமான பொருட்களும் அடங்கியுள்ளன.

இதில் அடங்கியுள்ள உட் கூறுகளின் முக்கியமானவைகளை கீழே காணலாம்

    நீர்

    மின்கரைசல்கள்

        2-21 மில்லிமோல்/லீட்டர் சோடியம் (குருதியில் உள்ளதை காட்டிலும் குறைவு)
        10-36 மில்லி மோல்/லீட்டர் பொட்டாசியம் (குருதியில் உள்ளதைக் காட்டிலும் அதிகம்)
        1.2 - 2.8 மில்லி மோல்/லீட்டர் கால்சியம்
        0.08 - 0.5 மில்லி மோல்/லீட்டர் மக்னீசியம்
        5-40 மில்லி மோல்/லீட்டர் குளோரைடு (குருதியில் உள்ளதைக் காட்டிலும் குறைவு)
        25 மில்லி மோல்/லீட்டர் பை-கார்பொனேட் (குருதியில் உள்ளதைக் காட்டிலும் அதிகம்)
        1.4 - 30 மில்லி மோல்/லீட்டர் பாஸ்பேட்டு

    சளியம் :

இச் சளியம் பெரும்பாலும் மியூக்கோ-பாலி-சாக்கரைடு (mucopolysaccharides) (சளிய பல் இனிசியம்), கிளைக்கோ புரோட்டின் (glycoproteins) ஆகியவை அடங்கியவை.
    நுண்ணியிரியை எதிர்க்கும் பொருட்கள் (தையோ-சயனேட் (thiocyanate), ஹைடிரஜன் பெராக்சைடும் (hydrogen peroxide), நோய்த்தடுப்புக்குளியம்-A ஆகிய இம்யூனோகுளோபின் A (immunoglobulin A)
    பல நொதியங்கள் உள்ளன. முக்கியமானவை மூன்று.
        α-amylase (EC3.2.1.1). அமிலேசு மாவுப்பொருள் மற்றும் லிப்பேசு என்னும் கணையத்தில் இருந்து பெறப்படும் நொதியம் செரிமானத்தைத் தொடங்குகின்றது. இதன் pH optima மதிப்பு 7.4
        lysozyme (EC3.2.1.17). லைசோசைம் (Lysozyme) நுண்ணுயிரிகளைக் கொல்லும் நொதியம்.
        உமிழ்நீர் லிப்பேசு (lingual lipase (EC3.1.1.3)). இது டிரை-கிளிசரைடு (Triglyceride) முதலிய கொழுப்புப் பொருட்களை பிரித்து ஒருவகையான கொழுப்புக் காடிகளாக மாற்றுகின்றது. lingual lipase (EC3.1.1.3). இந்த உமிழ்நீர் லிப்பேசு கொண்டுள்ள pH optimum ~4.0 ஆகும் எனவே இது போதிய அளவு காடிச் சூழல் பெறும் வரை செயலுந்தப்படுவதில்லை.
        இவையன்றி சிறுசிறு பிற நொதியங்களும உள்ளன. அவையாவன: உமிழ்நீர்க் காடி பாஸ்பட்டேசு A+B (EC3.1.3.2), N-அசிட்டைல்முராமி-L-அலனைன் அமிடேசு (N-acetylmuramyl-L-alanine amidase) (EC3.5.1.28), NAD(P)H டி-ஹைடிரோ-கெனேசு-கியுனோன் (NAD(P)H dehydrogenase-quinon)e (EC1.6.99.2), உமிழ்நீர் லாக்ட்டோ-பெராக்சைடேசு (salivary lactoperoxidase) (EC1.11.1.7), சூப்பர்-ஆக்சைடு டிஸ்ம்யூட்டேசு (superoxide dismutase) (EC1.15.1.1), குளூட்டா-தியோன் டிரான்ஸ்ஃவெரேசு (glutathione transferase) (EC2.5.1.18), வகுப்பு-3 ஆல்டிஹைடு டெ-ஹைடிரோஜெனேசு (class 3 aldehyde dehydrogenase) (EC1.2.1.3), குளூக்கோசு-6-பாஸ்பேட்டு ஐசோமெரேசு (glucose-6-phosphate isomerase )(EC5.3.1.9), மற்றும் டிஸ்யு கல்லிக்ரைன் (tissue kallikrein) (EC3.4.21.35) ஆகும்.
    செல்கள் (கலங்கள் (Cells): ஒரு மில்லி லிட்டரில் சுமார் 8 மில்லியன் மனித செல்களும், 500 மில்லியன் நுண்ணுயிரி செல்களும் இருக்கின்றன. நுண்ணியிரியின் செல்கள் இருப்பதால் சில நேரங்களில் கெட்ட வாய் நாற்றம் ஏற்படுகின்றது.


நோய் தடுப்பு சக்தி

உமிழ்நீரில் உள்ள புரதங்களால் நோய் கிருமிகளை அழிக்க முடியும். பறவைக் காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்ற தொற்று நோய்களில் இருந்து முதியவர்களை காப்பாற்றுவதில் உமிழ்நீரில் உள்ள புரதங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

Wednesday, November 5, 2014

வெங்காயத்தின் பயன்கள்

வெங்காயத்தின் பயன்கள் :


1) நாலைந்து வெங்காயத்தைத் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும்.

2) சம அளவு வெங்காயச் சாறையும், வளர் பட்டைச் செடி இலைச் சாறையும் கலந்து காதில் விட, காது வலி குறையும்.

3) வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி, இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.

4) வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத் தூளையும் இவற்றைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட, எல்லாவிதமான மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5) வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட, உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

6) வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட, கட்டி உடனே பழுத்து உடையும்.

7) வெங்காயச் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க, இருமல் குறையும்.

8.) வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து, வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர, பல்வலி, ஈறுவலி குறையும்.

9) வெங்காயப்பூ, வெங்காயத்தைச் சமைத்து உண்ண, உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு குறையும்.

10) வெங்காயத்தை அவித்து, அதோடு தேன், கற்கண்டை சேர்த்துச் சாப்பிட, உடல் பலம் ஏறும்.

11) வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

12) வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

13) படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றைப் பூசிவர மறைந்துவிடும்.

14) திடீரென மூர்ச்சையானால், வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால், மூர்ச்சை தெளியும்.

15) வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால், சீதபேதி நிற்கும்.

16) வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க, நன்கு தூக்கம் வரும்.

17) பனைமரப் பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, சூடுபடுத்தி குடித்துவர, மேக நோய் நீங்கும்.

18) வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட, மேகநோய் குறையும்.

19) வெங்காயம் குறைவான கொழுப்புச் சத்து கொண்டது. எனவே, குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20) பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21) வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்திற்கும் உதவுகிறது.”

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...