மஞ்சள் காமாலை நோய்க்கு மூலிகை மருந்து
எலுமிச்சை :
எலுமிச்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை, கண் நோய், ஆரம்ப கால யானைக்கால் நோய் ஆகியவை குணப்படும்.
கீழாநெல்லி :
கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
கடுக்காய் :
அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.
அருநெல்லி :
அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம்.
கொன்றைப் பூ :
கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
சுரை இலை :
சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.
தும்பை இலை :
மஞ்சள் காமாலை குணமாக தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு, மோரில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும்.
கரிசிலாங்கண்ணி இலை :
கரிசிலாங்கண்ணி இலைகளையும் அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மஞ்சள்காமாலை நோயினை கண்டறிய இரத்தத்தில் பிலிரூபின் டெஸ்ட் - Billirubin Test -Total
1 - 0.8 mg -இருந்தால் அது நார்மல்
2 - 1,5 mg -இருந்தால் அது துவக்க நிலை
3 - 4 mg மற்றும் அதற்கு மேல் இருந்தால் நோய் முற்றிய நிலை
No comments:
Post a Comment