Monday, August 25, 2014

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள் :

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம்.
உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடுஅதில் உள்ள பல்வேறு மருத்துவக்
குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை
எடுத்து, 200 மி.லிஅளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை
சாப்பிடுங்கள்பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள்தேவைப்பட்டால்
கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வரஉடல் சூடு,
மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

வெந்தயத்துடன்சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி
செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர
வயிற்றுக் கோளாறுகள்அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில்
கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்வெறும்வயிற்றில்
இதனைக் குடிக்க வேண்டும்.

வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி
போட்டு் குடித்தால்சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் 
இருக்கும்.


வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில்வெந்தயம் – பெருங்காயப் பொடியை
ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு
கட்டுப்படுத்தப்படும்.



மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும்சர்க்கரை நோய்
இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால்வெந்தயப் பொடியை சிறிய
வெல்லகட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட
மூட்டு வலி குறையும்.



எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும்வெந்தயப் பொடியையும்,
பெருங்காயப் பொடியையும் சேர்க்கசுவை கூடுவதுடன்உடல் 
உபாதைகளையும் போக்கும்.



இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில்வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம்
ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால்சுவை கூடுவதுடன்உடலுக்கும்
ஏற்றதாக அமையும்.
 
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால்நீரிழிவு,
வயிற்றுப்புண்வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதுகோடை காலத்தில்
உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து
சாப்பிடலாம்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது.
பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக்
கொடுக்க பால்சுரக்கும்.


1. இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டுல பத்துப் போட வீக்கம்
    தீப்புண் குணமாகும்.

2. வெந்தயத்த நல்லா காயவச்சுப் பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி
    தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரை நோய்குறையும்.

3. வெந்தயம் 20 கிராம் எடுத்து 350 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைச்சு சாப்பிட 
   இரத்தம் ஊறும்.

4. கஞ்சியில் வெந்தயத்த சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

5. வெந்தயத்த ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊறவச்சு நல்லா அரைச்சு தலைக்கு
    தேச்சு குளிக்க முடி உதிராம நல்லா வளரும்.

6.
இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊரவைத்துஅதிகாலை   
வெரும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீர்ழிவு நோய் சிறிது சிறிதாக 
 வீரியம்குறையும். 
கிராம் வெந்தயத்த நல்லா வேகவச்சுக் கடஞ்சு கொஞ்சம் தேன் சேர்த்து
   சாப்பிட தாய்ப்பால் பெருகும்.

7. வெந்தயம்கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து கஞ்சியாக்கி சாப்பிட
   உடல் வெப்பம் நீங்கும்.

8. வெந்தயம்கடுகுபெருங்காயம்கறிமஞ்சள் சமமா எடுத்து நெய் விட்டு 
 வறுத்துப் பொடியாக்கி சாப்பிட்டில் கலந்து சாப்பிட வயிற்றுவலிபொருமல்,
  ஈரலவீக்கம் குறையும்.

9. வெந்தயம்வாதுமைப் பருப்புகசகசாஉடைத்த கோதுமைநெய்பால்,
சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் வன்மையாவும்வலுவாவும் இருக்கும்.
  இடுப்புவலி தீரும்.

10. வெந்தயத்த சீமை அத்திப்பழம் சேர்த்து அரைச்சு கட்டிகளுக்குப் பத்துபோட்டா 
   கட்டி உடையும்படைகளுக்கும் பூசலாம்.

11. வெந்தயத்தையும் அரைச்சுத் தீப்புண்கள் மேல பூச எரிச்சல் குறையும். 
     பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும்
     சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்.
ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சலி தணிந்து ஆறும்.

வெந்தியப்பொடியை ஒரு தேக்கரண்டியாக்க் காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு
  வர மதுமேகம் குணமாகும்.

வெந்தயத்துடன் சமன் சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில்
 குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை
  பழுத்துஉடையும்.

தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருதரிக்காது.
முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடுசெர்த்து அரைத்து
சிறிது ஊர வைத்துத் தலை முழுகினால் பலன் கிட்டும்.

முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் 
எரிச்சல் குறையும் பருவும் குணமடையும்.

வெந்தயக்கீரை.
 
வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து
விடும்மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும்.
வயிற்றுஉப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி,
இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி,
காலைமாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி
பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை
கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தாலகு உடல் சூடு தணிந்து சமப்படும்.
சீதபேதிகுணமாகும்வயிற்றுப் போக்கை நிறுத்தும்மாதவிடாய் தொல்லை
நீங்கவும்உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.
உடலுக்கு நல்ல பலம்தரும்.

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கிகழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.
வெந்தயக்கீரைஇருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை
எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டிஎல்லாம் எந்த அளவு இருக்கிறதோ
அந்த அளவிற்கு சர்கரைசேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால்
அல்வா போல வரும்இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு
 பால் சேர்த்துக் கடைந்து,ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற
 சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது.  வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு
செர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது வாய்ங்கு
வேக்காடு வராது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.
வெந்தயக்கீரையில்  வைட்டமின் சத்தியும்சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால்
இதைப் சாப்பிடும் போது மாரடைப்புகண்பார்வை குறைவாதம்சொறிசிரங்கு,
இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது.

No comments:

Post a Comment

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...