Sunday, September 14, 2014

எளிய மூலிகை வைத்தியம்

    எளிய மூலிகை வைத்தியம் :

மூக்கடைப்பு குணமாக

அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்கிறார். அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். இதை நெற்றிப்பொட்டு மற்றும்  மூக்கின் மீது தடவினால் மூக்கடைப்பு குணமாகும்.

 செய்முறை : (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலக்கவேண்டும். நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் பூசவேண்டும். அப்படியே 1 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். அதன் பின் எழுந்தால் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இருக்காது.

தூதுவளைக் கீரையுடன் சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டிச் சாப்பிட்டால் மூக்கடைப்பு, தும்மல், மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.

துயிலிக் கீரை சாறில் மாசிக்காயை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, மூக்குப் பொடி போல் மூக்கில் உறிஞ்சிக் கொண்டால், மூக்கடைப்பு நீங்கும்.

மூக்கில் இருந்து இரத்தம் வடிதல் :


பிரண்டை வதக்கி சாறு எடுத்து இரண்டு துளிகளைக் காதில் விட்டால், காது வலி நீங்கும். மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து இரத்தம் வடிதல் குணமாகும்.

மூச்சுத் திணறல் :


வங்கார வள்ளைக் கீரைச் சாறில் சுக்கு பவுடரைக் குழைத்துச் சாப்பிட்டால் இதய நோய்களும், இரத்த அழுத்தமும் குணமாகும்.

பரட்டைக் கீரை , தூதுவளை, முசுமுசுக்கை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் ஆஸ்துமாவில் ஏற்படும் மூச்சிரைப்பு குணமாகும்.

குஷ்ட நோய்கள் :


வல்லாரை, வெள்ளெருக்கு, ஆடுதின்னாப்பாலை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட குஷ்ட நோய்களும் குணமாகும்.

கைகால் எரிச்சல் :


பருப்புக் கீரை, உளுந்து இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் கைகால் எரிச்சல் குணமாகும்.

No comments:

Post a Comment

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...