Thursday, August 14, 2014

ரோஜாப்பூ மருத்துவம்

                           
              ரோஜாப்பூ மருத்துவம்

1. ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் பன்னீர் கண்களில் உள்ள எரிச்சல் தன்மையை நீக்கும்.
2. ரோஜா இதழ், இஞ்சி, புளி, பச்சைமிளகாய், தேங்காய் இவற்றைச் சேர்த்து அரைத்து சட்னி செய்து சாப்பிட உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகி செரிமானமும் எளிதாகும்.
3. ரோஜா இதழ்களை வெற்றிலைப்பாக்குடன் சேர்த்துச் சாப்பிட வாய் துர்நாற்றம் நீங்கும்.
4. சுக்கு - மல்லி காபியுடன் ரோஜா இதழ்களைச் சேர்த்து அருந்த அஜீரணம் அகலும். தலைசுற்றல், மயக்கம், இதயம் தொடர்பான கோளாறுகள் நீங்கும்.
5. ரோஜா இதழ் குல்கந்து உடலுக்கு வலிமை, குளிர்ச்சி அளிக்கும்.
6. ரோஜாப்பூ கஷாயத்தில் பசும்பால், சர்க்கரை சேர்த்துப் பருகி வந்தால் பித்தநீர் மிகுதியால் ஏற்படும் மயக்கம், வாய்க்கசப்பு, நெஞ்சு எரிச்சல் நீங்கிவிடும்.
7. ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு காலை, மாலை வாயிலிட்டு மென்று சாப்பிட வயிற்றுக்கடுப்பு, சீதபேதி குணமாகும். வாய்ப்புண், குடல்புண் ஆறும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கு நீங்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறுநீர் எளிதாகப் பிரியும்.
8. ரோஜாப்பூ இதழ்களுடன் துவரம்பருப்பு கலந்து கூட்டு செய்து உண்டுவர உடல் உஷ்ணம் சம நிலைப்படும். உடல் பலத்தையும் சுறுசுறுப்பையும் கொடுக்கும். மூளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும்.

No comments:

Post a Comment

Pirantai rid of all diseases

Pirantai rid of all diseases இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த ...